பாரா முகம் எதற்கு......

வேரா இருந்தவளே -எனக்கு
வெற்றிக்கனி தந்தவளே
பாரா முகம் எதற்கு-என்மேல்
பண்பற்று போனவளே
ஊற்றெடுத்த நீராய்-எனைநோக்கி
உழன்றோடி வந்தவளே
நீயின்றி நான் இங்கு
நீரற்ற நிலமானேன்
எப்படியோ நான் உனக்கு
வேற்று கிரக வாசியானேன்
மாற்று வழி சொல்லிடுவாய் -என்
மாசற்ற குலவிளக்கே
நீயும், நானுமாய்
காசற்ற உலகில் வாழ....
மீண்டும் கைகோர்த்து நின்றிடுவோம்
வேண்டும் நீ எனக்கு மங்காத வான் விளக்கே
வினாடியை வீணடிக்காமல்
விரைந்து நீ வந்துவிட்டால்
நாம் இணைந்து காலத்தை வென்றிடுவோம்
கவிதையென இருக்கும் இவ்வுலகில்
காலமெல்லாம் வாழ்ந்திடுவோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக