வெள்ளி, 8 மே, 2015

என் மனதே நீ தானடி...




குழந்தை ஒலி கேட்டேன்
உன் குரலில்

கொஞ்சும் தமிழ் கேட்டேன்
உன் மொழியில்

நிலவை நான் நேரில்
பார்த்து வியந்தேன்
உன் வடிவில்

கள்ளம் கபடமற்ற
உன் அன்பில்
கலந்தேன்

உன்னில் ஏது ஒரு
காரணமுமின்றி
இணைத்துக் கொண்டேன்
என்னை

விண்ணைத் தொடும்
அளவிற்கு வியந்தேன்
உன்னழகில்

பேரன்பு கொண்டு
நேசித்ததைபோல் நீ
என்னில் கலந்தாய்

உனக்கும் எனக்குமான
இடைவெளியை உன்
அன்பில் அளந்தாய்

எனக்குள் கட்டுண்டு
கிடந்த காதலை
உன் இருவிழி கணையால்
பிளந்தாய்

கண்ணே, உனை கண்டதும்
காணாததைக் கண்டதைப்போன்று
சிறகடித்துப் பறந்தேன்
வானில்

என்னோடு நீ பேசிய
காதல் வார்த்தைகளை
எடுத்து ஊரவைத்தேன்
தேனில்

நீண்ட நெடுகாலம் ஆனதுபோல்
பழகி களித்தோம்

நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
என்பதைப் போல்
இணைந்து கிடந்தோம்
மனதால்

அன்பே, உன் வார்த்தை
கேளாது ஓர்நாளும் கழியாது

தினம் காதோரம் ரீங்காரமிடும்
சிம்பொனி இசையாய் உன் குரல்

தெகிட்டி விட்டதென்று
ஓர்நாளும் சொன்னதில்லை
என் காது

கண்ணே, என் மன வீட்டில் நீ
நுழையும் போது
வலது காலை எடுத்து
வைத்துதான்
வந்தாயா?

அப்படி என்றால் வந்தவழித்
தடம் மறைவதற்குள்
பிறகு ஏன் சென்றாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக