ஒன்றாய் கலந்த அன்பு
பிரிந்து, தவித்துக் கிடக்குமென்று
நான் நினைத்து பார்க்கலையே
குறுகிய காலத்திற்குள்
நமக்குள் பிரிவு வந்து
சேரும் என்று நான்
கனவேதும் காணலையே
மேகம் கருக்கலையே
மின்னல் வெட்டலையே
வானம் பிளந்ததுபோல்
மழையேதும் கொட்டலையே
புயல் வீசலையே
பூகம்பம் வரவில்லையே
கடல் பொங்கி எழவில்லையே
பிறகு ஏன் திசைக்கு
ஒன்றாக சிதறிப்போனது
உன்மேல் நான் வைத்த ஆசை
உறக்கத்தில் சலனமின்றி
எனக்குள் கேட்கிறது
நமக்குள் வேரறுந்த ஓசை
நுாலறுந்த காற்றாடியாய்
அலைந்து திரியுறேனே
திரிந்த பசும் பாலாய்
பயனற்று கிடக்குறேனே
என்னோடு நீயின்றி


